சிலாங்கூர் பட்டத்திளவரசர் தெங்கு அமிர் ஷா கிறிஸ்துவ சமயத்தைத் தழுவினார் என்று தம் முக நூல் மற்றும் டிவிட்டர் பதிவுகளில் கூறியதற்காக மலாக்கா முன்னாள் முதலமைச்சர் ரகிம் தம்பி சிக் மன்னிப்பு கேட்டுக் கொண்டார்.
சிலாங்கூர் அரண்மனை திங்கள்கிழமை போலீசில் புகார் செய்ததை அடுத்து இது நடந்தது.
“டிவிட்டரிலும் முகநூலிலும் மேன்மை தங்கிய சிலாங்கூர் பட்டத்திளவரசர் கத்தோலிக்கராக மாறிவிட்டார் எனப் பதிவிட்டதன் தொடர்பில், அது வலைப்பதிவு ஒன்றிலிருந்து எடுக்கப்பட்ட ஆதாரமற்ற செய்தி என்பதை ஒப்புக்கொள்கிறேன்.
“அது பட்டத்திளவரசருக்கும் இஸ்தானா சிலாங்கூருக்கும் ஏதாவது அசெளகரியத்தை ஏற்படுத்தியிருந்தால் அதற்காக மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்”, என ரகிம் அவரது முகநூல் பக்கத்தில் குறிப்பிட்டிருந்தார்.
இளவரசர் இஸ்லாத்திலிருந்து வெளியேறி விட்டார் என்ற வதந்தி இணையத்தில் சில ஆண்டுகளாகவே வலம் வந்து கொண்டிருக்கிறது.
அரண்மனை அதை மறுத்து வந்திருக்கிறது.
நெருப்பில்லாமல் புகையாது மவனே!
நெருப்பில்லாமல் புகையாது மவனே.
புகை வருகிறது.. நெருப்பைதான் காணோம்
இப்போது நாம் நெருப்பில்லாமல் புகைந்து கொண்டிருக்கிறோம்! புகைமூட்டம் தாங்க முடியலே!