பிலிபைன்சில் சீன அதிகாரிகள் சுட்டுக் கொலை

பிலிபைன்சிலுள்ள செபு நகரில், சீன அதிகாரிகள் மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

செபு நகரில் சீன அதிகாரிகள் ஹோட்டலில் அமர்ந்திருந்தனர். அப்போது திடீரென சீன தூதரக அதிகாரிகள் மீது மர்ம நபர்கள் துப்பாக்கி சூடு நடத்தினர். அதில், 2 தூதரக அதிகாரிகள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியாகினர். மற்றொருவர் பலத்த காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.

-http://www.dinamani.com