இந்தியாவிலிருந்து ஆங்கிலமொழி ஆசிரியர்களைத் தருவிக்கும் திட்டம் ஒத்திவைப்பு

edu minஆங்கில  மொழி  பயிற்றுவிக்க ஆசிரியர்களை  இந்தியாவிலிருந்து  தருவிக்கும்  திட்டம்  இப்போதைக்குத்  தள்ளி  வைக்கப்பட்டிருப்பதாகக்  கல்வி  அமைச்சர்  மகாட்சிர்  காலிட்  கூறினார்.

“அத்  திட்டத்தை  இப்போதைக்குத்  தள்ளி வைத்திருக்கிறோம். இது  பற்றி  அடுத்த  ஆண்டில்  கருத்துரைப்பேன்”,என  செய்தியாளர்  ஒருவரிடம்  அமைச்சர்  தெரிவித்தார்.

இந்தியாவிலிருந்து  மட்டுமல்ல  யுனைடெட்   கிங்டம்,  கேம்ப்ரிட்ஜ்  உள்பட  மற்ற  இடங்களிலிருந்தும்  ஆங்கில  மொழி  ஆசிரியர்களைத்  தருவிக்கும்  திட்டமும்  தள்ளிப்  போடப்பட்டிருக்கிறது  என்றாரவர்.

கடந்த  மாதம்  கல்வி  துணை  அமைச்சர்  பி.கமலநாதன்  ஆசிரியர்களைச்  சேர்க்கும்  திட்டம்மீது  விரைவில்  முடிவெடுக்கப்படும்  என்று  கூறி  யிருந்தார்.