கலிபோர்னியா தாக்குதல்! சூத்திரதாரிகள் இருவர் சுட்டு கொலை

callfornia_police_001அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் உள்ள சென் பெர்னாடினோ பகுதியில் துப்பாக்கித் தாக்குதல்கள் நடத்தப்பட்டு 14 பேர் பலியாகினதுடன் மேலும் 17 பேர் காயமடைந்துள்ளனர்.

இந்த தாக்குதல் நடத்திய 3 துப்பாக்கிதாரிகள் தேடப்பட்டு வந்த நிலையில் இருவர் சுட்டுக் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

பொலிஸார் குற்றவாளிகளின் காரை பின்தொடர்ந்தனர். அப்போது அவர்கள் பொலிஸார் நோக்கி துப்பாக்கியால் சுட்டனர், பதிலுக்கு பொலிஸாரும் சுட்டனர். சில மணிநேரம் நடந்த துப்பாக்கிச்சூட்டில் பொலிஸார் எஸ்யுவி காரில் இருந்த இரண்டு பேரையும் சுட்டுக் கொன்றனர்.

மேற்படி சந்தேக நபர்கள் இருவரும் பொலிஸ் உத்தியோகத்தர்கள் எனவும் முஸ்லிம் இனத்தவர்கள் எனவும் அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

இந்த சம்பவம் தீவிரவாதத்ததுடன் தொடர்புடையதாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதுடன் மற்றுமொருவர் பொலிஸாரினால் தேடப்பட்டு வருகிறார்.

-http://world.lankasri.com