ஈராக்கில் ஐஎஸ் தீவிரவாதிகள் சேர்த்து வைத்திருந்த மொத்த பணத்தையும் அமெரிக்க போர் விமானங்கள் தாக்கி அழிப்பது போன்ற வீடியோ வெளியாகியுள்ளது.
ஈராக்கின் மொசூல் நகரில் உள்ள முகாம் ஒன்றில் பணத்தை சேமித்து வைத்து ஐ.எஸ் தீவிரவாதிகள் பாதுகாத்து வந்தனர்.
உலகம் முழுவதும் தீவிரவாத செயல்களில் ஈடுபடும் கைக்கூலிகள் மற்றும் ஐ.எஸ் படையில் சேரும் வெளிநாட்டினர்களுக்கு இங்கிருந்துதான் பணபட்டுவாடா நடைபெற்று வருவதாக கூறப்பட்டது.
இந்நிலையில் இந்த இடத்தை கடந்த 11ம் திகதி அமெரிக்க போர் விமானங்கள் தாக்கி அழித்துவிட்டன, மில்லியன் கணக்கான பணம் தீக்கிரையாகிவிட்டது, ஆனால் அழிக்கப்பட்டது எந்த நாட்டு பணம்? எவ்வளவு தொகை? என்ற தகவல் வெளியாகவில்லை.
இதுகுறித்து அமெரிக்காவின் தலைமை கட்டுப்பாட்டு அதிகாரி ஜெனரல் Lloyd Austin கூறுகையில், இது ஒரு சிறந்த தாக்குதல், மில்லியன் கணக்கான பணம் அழிந்து விட்டது.
இதனை தொடர்ந்து அடுத்தபடியாக ஐஎஸ்-க்கு வருவாய் அளிக்கும் நிலைகளை தாக்கி அழிக்க உள்ளதாகவும், பொருளாதார ரீதியாக பாதிப்படையும்படி அவர்கள் மீது விமான தாக்குதல் நடத்தவும் திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
-http://world.lankasri.com
நம்ம மலேசியாவுக்கு 2.6 BILLION அப்பா இங்கே இருந்துதான் வந்திருக்கும் போல
மதத்தின் பேரில் பயங்கரவாதம் உருவாதை தடுக்க வேண்டும் , பயங்கரவாததிற்கு துணை போவோரை அழிக்க வேண்டும், அதன் பிறகே உலகம் பாதுகாப்பாக செழிக்கும்.
T.SIVALINGAM @SIVA அவர்களே இதைத்தான் எல்லோரும் சொல்கிறார்களே– பான் கீ மூனிலிருந்து அறிவார்ந்த சாதாரண மனிதர் வரை? ஆனால் உண்மை நிலை என்ன? பயங்கர வாதத்தினால் யாருக்கு பலன்? அதை புரிந்து கொள்வீர். கண் முன்னே நடப்பது ஒன்று அது ஏன் யாரால் நடத்தப்படுகிறது? அதன் பின்னணி என்ன? உண்மையிலேயே பயங்கர வாதத்தை ஒழிக்க வேண்டுமா? எத்தனை முஸ்லிம் நாடுகளின் ராணுவம் ஒன்று பட்டு தாக்கினால் ISIS என்றோ அழிக்கப்படிருக்கும். இதெல்லாம் பிள்ளையை கிள்ளி விட்டு தாலாட்டும் செயல் . ஐக்கிய நாட்டு சபை ஒரு வெத்து வெட்டு– அரசியல் வாதிகளிடமிருந்து ஐநாவை மீட்டு உண்மையான அறவாதிகளிடம் ஒப்படைக்கவேண்டும்–அதிலும் அறிவுக்கு ஒவ்வாத வெட்டு வாக்கு இருக்கக்கூடாது– முடியுமா? இது கானல் நீர்.