பருவநிலை மாற்றம் காரணமாக கடந்த 2015ஆம் வருடமே அதிக வெப்பம் பதிவான வருடமாக இருந்ததாக நாசா தெரிவித்துள்ளது.
மேலும் இதுகுறித்து நாசா வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: – 1880 ஆம் ஆண்டில் இருந்து உலகத்தில் பதிவாகும் வெப்பம் குறிக்கப்பட்டு வருகிறது. கடந்த 136 வருடங்களில் கடந்த 2015 ஆம் ஆண்டில் தான் அதிக வெப்பம் உணரப்பட்டுள்ளது. மேலும் எல் நினோ தாக்கத்தால் 2016 ஆம் ஆண்டு வெப்பமான ஆண்டாகவே இருக்கும் எனவும் நாசா தெரிவித்துள்ளது.
-http://www.dinamani.com


























