ஏஜி: எஸ்ஆர்சி, ரிம2.6 பில்லியன் மீதான விசாரணை முடிந்தது: பிரதமர் குற்றம் எதுவும் புரியவில்லை

nfaமலேசிய  ஊழல்தடுப்பு  ஆணையத்தின்  விசாரணை  அறிக்கைகளின்  அடிப்படையில்   பிரதமர்  நஜிப்  அப்துல்  ரசாக்மீது  குற்றச்சாட்டு  எதுவும்  சுமத்தப்படாது.

எஸ்ஆர்சி, ரிம2.6 பில்லியன் நன்கொடை மீதான விசாரணை  அறிக்கைகளை  முழுமையாக  படித்துப்  பார்த்து  மனநிறைவு   கொள்வதாக  சட்டத்துறைத்  தலைவர்  முகம்மட்  அபாண்டி  அலி  கூறினார்.

“உண்மைகளையும்  சாட்சியங்களையும்  அடிப்படையாக  வைத்து  அரசுதரப்பு   வழக்குரைஞரான  நான்  குற்றம்  எதுவும்  நிகழ்ந்திருப்பதாகக்  கருதவில்லை.

“சம்பந்தப்பட்ட  விசாரணை  அறிக்கைகளை  எம்ஏசிசி-க்கே  திருப்பி  அனுப்பி  மூன்று  விசாரணைகளையும்  முடித்துக்கொள்ளும்படி  கூறப்  போகிறேன்”,  என  அபாண்டி  புத்ரா  ஜெயாவில்  செய்தியாளர்களிடம்  தெரிவித்தார்.