சீனா சூப்பர் மார்க்கெட்டுகளில் மாட்டிறைச்சிக்கு பதிலாக மனித இறைச்சிகளா? அச்சத்தில் மக்கள்

chichi

சீனாவில் மாட்டிறைச்சி என்ற பெயரில் மனித மாமிசங்கள் விற்கப்படுவதாக வெளியான தகவல்கள் அதிச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மாட்டிறைச்சியினை துண்டு துண்டாக வெட்டி அதனை பதப்படுத்தி கேன்களில் அடைக்கப்பட்டு “corned beef” என்ற பெயரில், சீனாவில் இருந்து தென் ஆப்பிரிக்க நாடான சாம்பியாவிற்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.

மேலும், இந்த corned beef சீனாவில் உள்ள சூப்பர் மார்க்கெட்டுகள் மற்றும் பெரிய கடைகளில் விற்பனை செய்யப்படுகின்றன.

இந்நிலையில், இந்த உணவினை தயார் செய்யும் சீனாவினர், மனித உடல்களை எடுத்து வந்து, அதனை உப்பு போட்டு நன்றாக சுத்தம் செய்து பதப்படுத்துகின்றனர்.

அதன் பின்னர், அதனை துண்டாக துண்டாக வெட்டி “corned beef” என்ற பெயரில் கேன்களில் அடைத்து சீனாவிற்கு விற்பனை செய்கின்றனர் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

தற்போது, இந்த தகவல் சீனா முழுவதும் பரவியுள்ளதால் அந்நாட்டு மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

இதுகுறித்து சீன தூதர் Yang கூறியதாவது, சற்றும் நம்பகத்தன்மையில்லாத ஒரு வதந்தயை சீனா பரப்பியுள்ளது மிகவும் தவறாகும்.

இதுபோன்று தீங்கிழைக்கும் அவதூறு மற்றும் இழிவான தகவலை பரப்பிய ஊடகத்திற்கு கடும் கண்டத்தை தெரிவித்துள்ளார்.

இந்த அவதூறான தகவலை சாம்பியா தூதரகமும் மறுத்துள்ளது.

சாம்பியா போன்று ஆப்பிரிக்காவில் உள்ள பல்வேறு நாடுகள், ஏற்றுமதி விடயத்தில் சீனாவுடன் நெருங்கிய உறவு வைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

விற்பனைக்கு மனித மாமிசமா? கடுமையாக மறுப்பு தெரிவித்த சீனா

பதப்படுத்தப்பட்ட மனித மாமிசத்தை ஆப்பிரிக்க நாடுகளுக்கு உணவாக ஏற்றுமதி செய்வதாக எழுந்த குற்றச்சாட்டுக்கு சீனா கடுமையாக மறுப்பு தெரிவித்துள்ளது.

சீனாவில் பணிபுரிந்துவரும் சாம்பியா நாட்டவரான பெண்மணி ஒருவர் ஆப்பிரிக்க நாட்டு மக்களுக்கு விடுத்த எச்சரிக்கை தகவலில், சீனாவில் இருந்து இறக்குமதியாகும் மாட்டிறைச்சி உணவுகளை உண்ண வேண்டாம் என்றார்.

மேலும் இது தொடர்பாக சில புகைப்படங்களையும் அவர் வெளியிட்டு எச்சரித்தார். அந்த புகைப்படங்கள் சாம்பியாவில் மக்களிடையே கடுமையான கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

ஆனால் சாம்பியாவில் இருந்து வெளியான இத்தகவலை உயர்மட்ட அதிகாரிகள் கடுமையாக மறுப்பு தெரிவித்துள்ளனர். பெயர் குறிப்பிட மறுத்துள்ள அப்பெண், உயிரிழந்த மனித உடல்களை சேகரித்து மாமிசத்தை பதப்படுத்தி மாட்டிறைச்சி என்ற பெயரில் விற்பனை செய்யப்பட்டு வருவதாக அவர் குற்றஞ்சாட்டினார்.

இதனிடையே சாம்பியாவுக்கான சீன தூதர் இத்தகவல் குறித்து மறுப்பு தெரிவித்தார். சாம்பியாவில் உள்ள உள்ளூர் நாளேடு ஒன்று வேண்டுமென்றே இதுபோன்ற பொய்களை பரப்பி மக்களை பீதியடைய செய்து வருவதாக குற்றஞ்சாட்டியுள்ளதுடன், இது கண்டிப்பாக ஏற்புடையதல்ல என்றார்.

ஆனால் இச்சம்பவம் தொடர்பாக வெளியான புகைப்படங்கள் அனைத்தும் Resident Evil 6 வீடியோ ஹேமின் காட்சிகள் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

-http://news.lankasri.com