மகாதிர்: வெளிநாட்டில் நஜிப்பைக் குறைகூறிப் பேசினால் என் கடப்பிதழைப் பறித்துக் கொள்வார்கள்

passportவெளிநாடுகளுக்குப் போய்  பிரதமர் நஜிப்  அப்துல்  ரசாக்கைக்  குறைகூறிப்  பேசினால்  அவருடைய   கடப்பிதழ்  திரும்பப்  பெற்றுக்கொள்ளப்படும்  எனக்  குடிநுழைவுத்  துறை   டாக்டர்  மகாதிர்  முகமட்டை  எச்சரித்துள்ளதாம்.

“நஜிப்புக்கு  ஆதரவாக  இல்லாததைப்  பேசினால்  வெளிநாட்டிலிருந்து  திரும்பியதும்  என்  கடப்பிதழ்  மூன்றாண்டுகளுக்கு  இரத்துச்  செய்யப்படும்  என்று  எச்சரிக்கப்பட்டிருக்கிறது”, என  முன்னாள்  பிரதமர்  இன்று  சுங்கை  புசாரில்  தெரிவித்தார்.

தம்  பயண  ஆவணத்தைப்  பறிக்கும்  உரிமை  குடிநுழைவுத்  துறைக்கு  உண்டா  என்றும்  மகாதிர்  வினவினார்.

“கூட்டரசு  அரசமைப்பில்  அதை  நான்  படிக்கவில்லை. எங்கிருந்து  இந்த  உரிமை  வந்தது  என்று  எனக்குத்  தெரியவில்லை”, என்றார்.