தெங்கு ரசாலி: மகாதிரின் பெர்சத்து தலையெடுப்பது சிரமம்

razaliடாக்டர்   மகாதிர்   முகம்மட்   அவரது   புதிய  கட்சியை   நிலைப்படுத்திக்கொள்ள   மிகவும்  சிரமப்படுவார்   என்கிறார்   அவரின்  பழைய   எதிரி    தெங்கு   ரசாலி  ஹம்சா.

மகாதிர்  பிரதமராக  இருந்தபோது   அம்னோவிலிருந்து   பிரிந்து   சென்று   ஒரு   தனிக்  கட்சியை    அமைத்தவரான   தெங்கு  ரசாலி,   அரசாங்க  இயந்திரம்  மொத்தமும்   பார்டி   பிரிபூமிக்கு   எதிராக    வேலை  செய்யும்   என்றார்.

“அவருக்குள்ள   செல்வாக்கை   வைத்து   மகாதிரால்    ஆதரவாளர்களைத்  திரட்ட  முடியும்.   ஆனால்,   அரசாங்கம்  தன்  வலிமை   அத்தனையையும்  கொண்டு  மக்கள்   எதிரணிக்கு    ஆதரவளிப்பதைத்    தடுக்கும்”,  என   இன்று  கோலாலும்பூரில்  செய்தியாளர்களிடம்     தெங்கு  ரசாலி   கூறினார்.

இதுபோக,   அம்னோ  இன்னும்   வலுவாக  இருப்பதும்    மலாய்க்காரர்-  அல்லாதார்   இணை  உறுப்பினர்களாக   ஒதுக்கப்பட்டிருப்பதும்   புதிய  கட்சி  வலுப்பெற   தடங்கல்களாய்   இருக்கும்   என்றாரவர்.