இரவல் கொடுத்த தொகுதிகளைத் திருப்பிக் கேட்கிறது மசீச

liow  கடந்த   பொதுத்   தேர்தலில்   எந்தெந்த   தொகுதிகளை    மசீச  இரவல்   கொடுத்ததோ    அவை   திரும்ப  ஒப்படைக்கப்பட   வேண்டும்   என்று   மசீச   தலைவர்   லியோ  தியோங்  லாய்  கோரிக்கை   விடுத்துள்ளார்.

2013   பொதுத்   தேர்தலில்  மசீச    அது   வழக்கமாக   போட்டியிட்டு  வந்த    வங்சா   மாஜு,   குவாந்தான்,   கேளாங்   பாத்தா   ஆகிய   தொகுதிகளை   அம்னோவுக்கு   இரவல்   கொடுத்தது.

அம்மூன்று   தொகுதிகளயுமே    எதிரணியினர்   வென்றனர்.  வங்சா   மாஜுவிலும்  குவாந்தானிலும்    முறையே    பிகேஆரின்   டான்   கீ  குவோங்கும்   புசியா   சாலேயும்  கேளாங்   பாத்தாவில்   லிம்   கிட்  சியாங்கும்   வென்றனர்.