இன்னொரு ரோஹிங்யா ஒற்றுமை பேரணி சிலாங்கூரில் நடத்தப்படும்

AnotherRohingyarallyபெரிய அளவிலான ரோஹிங்யா ஒற்றுமை பேரணி டிசம்பர் 4 இல் பிரதமர் நஜிப் ரசாக் மற்றும் பாஸ் தலைவர் அப்டுல் ஹாடி அவாங்    ஆகியோர் தலைமையில் நடத்தப்பட்டது. அது போன்ற இன்னொரு ரோஹிங்யா ஒற்றுமை பேரணி சிலாங்கூர் மாநிலத்தில் நடத்தப்படவிருக்கிறது என்று சிலாங்கூர் மனிதநேய நிதி நிறுவனர் யூனுஸ் ஹய்ரி அறிவித்தார்.

சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழுவில் இஸ்லாமிய விவகாரம் மற்றும் மலாய் மரபுகள் போன்றவற்றுக்கு பொறுப்பாளரான யுனுஸ் இதனை ஷா அலாமில் இன்று பின்னேரத்தில் கூறினார்.

இப்பேரணி டாத்தாரன் கெமெர்டேக்கஆன், ஷா அலாமில் டிசம்பர் 23 இல் மாலை மணி 6.00 லிருந்து இரவு மணி 11.30 வரையில் நடைபெறும்.

இப்பேரணியில் பாஸ் தலைவர் ஹாடி மற்றும் மியன்மாருக்கான ஒஐசி பிரதிநிதி சைட் ஹமிட் அல்பார் ஆகியார் உரையாற்றுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்று யுனுஸ் தெரிவித்தார்.