கூட்டமாக விவாகரத்து செய்யும் சீன கிராமத்து தம்பதியினர்: காரணம் இதுதான்!

cchinaசீனாவில் வலுக்கட்டாயமாக இடிக்கப்படும் வீடுகளுக்கு அரசிடம் இருந்து அதிக இழப்பீடை பெறும் பொருட்டு அங்குள்ள தம்பதிகள் விவாகரத்து முடிவுக்கு வந்துள்ளனர்.

சீனாவின் தென் பகுதியில் உள்ள ஒரு சிறிய கிராமத்தில், வீடுகள் வலுக்கட்டாயமாக இடிக்கப்படுவதால் அதிகப்படியான இழப்பீடை பெற அங்கு வாழும் 160க்கும் மேலான தம்பதியினர் விவாகரத்து செய்ய முடிவு செய்துள்ளனர்.

சினாவின் கிழக்கு மாகாணமான ஜியாங்சுவின், ஜியாங்பே கிராமத்தை உயர் தொழில்நுட்ப வளர்ச்சி மண்டலமாக மாற்ற அங்குள்ள 160 வீடுகள் இடிக்கப்படவுள்ளன.

எனவே அங்குள்ள தம்பதியினர் விவாகரத்து செய்து தனியாக வாழ்வதாகத் தெரிவித்தால் இரண்டு புதிய வீடுகள் கிடைக்கும். மேலும் குறைந்தபட்சம் 19 டொலர்கள் கூடுதல் இழப்பீடு கிடைக்கும் என்பதையும் அவர்கள் தெரிந்து கொண்டுள்ளனர்.

அதில் சில தம்பதியினர் 80 வயதிற்கும் மேற்பட்டவர்கள். மேலும் அவர்களில் பெரும்பாலானோர் தொடர்ந்து, சேர்ந்து வாழவும் முடிவு செய்துள்ளதாக தெரிவித்தனர்.

-http://news.lankasri.com