விசா காலவதியானதால் 50 வட கொரியர்கள் நாடு கடத்தப்படுவர்

dpmசரவாக்கில்   பணிபுரியும்    வட   கொரியரில்   50   பேர்     அவர்களின்   நாட்டுக்குத்  திருப்பி   அனுப்பப்படுவர்.  அவர்களின்   விசாக்கள்   காலாவதியானதே   காரணம்    எனத்   துணைப்   பிரதமர்    அஹமட்   ஜாஹிட்  ஹமிடி   கூறினார்.

அரசாங்கத்துக்கும்  அரசாங்கத்துக்குமிடையிலான   ஏற்பாட்டில்   170க்கும்   மேற்பட்ட    வட   கொரியர்கள்   சரவாக்கில்    பணி  புரிந்து   வருகிறார்கள்.

“அவர்களின்  விசாக்கள்    காலாவதியாகி  விட்டதால்    அவர்கள்   பியோங்காங்குக்குத்   திருப்பி   அனுப்பப்படுவார்கள்.   அவர்கள்   சரவாக்கில்  காவலில்   வைக்கப்படவில்லை.  ஆவணங்கள்   தயாரானதும்   அவர்கள்   அவர்களின்   நாட்டுக்கு   அனுப்பப்படுவர்”,  என்று   ஜாஹிட்   இன்று      நாடாளுமன்ற     வளாகத்தில்   செய்தியாளர்களிடம்    தெரிவித்தார்.