சாபாவில் முன்கூட்டிய தேர்தல் இன்னும் பரிசீலனையில்தான் உள்ளது

dpm14வது   பொதுத்   தேர்தலுக்கு  முன்பே   சாபாவில்   மாநிலத்   தேர்தல்கள்   நடத்தப்படும்   என்று   கூறப்படுவது  வெறும்  ஊகமே.  அதன்   தொடர்பில்   கூட்டரசு  நிலையிலும்  மாநில   அளவிலும்   பிஎன்   எந்த  முடிவையும்  இன்னும்    செய்யவில்லை.

மாநில   அரசியல்   நிலவரங்களை   மட்டுமல்லாமல்   நாடு   முழுமைக்குமான   நிலவரங்களையும்   கருத்தில்  கொண்டே   சாபாவில்   சட்டமன்றத்   தேர்தல்   நடத்தும்  விவகாரத்தில்   முடிவெடுக்கப்படும்    எனத்  துணைப்  பிரதமர்   அஹ்மட்  ஜாஹிட்  ஹமிடி    கூறினார்.

“பிஎன்  தலைவருமான   பிரதமர் (நஜிப்  அப்துல்  ரசாக்)  இன்னும்  இறுதி   முடிவு   செய்யவில்லை”,  என  நேற்று   கோட்டா  மருடுவில்   அவர்   கூறினார்.