1எம்டிபி நிதி கிடைக்கப்பெற்ற முன்னாள் பாஸ் தலைவர் யார்? ரபிசி நாளை அறிவிப்பார்

expoமுன்னாள்   பாஸ்     தலைவர்    ஒருவர்    1எம்டிபி-இலிருந்து  நிதி  பெற்றுள்ளதாகக்  கூறியுள்ள  பிகேஆர்  உதவித்    தலைவர்  ரபிசி  ரம்லி   அவரது  பெயரை    நாளை    அறிவிப்பார்.

“பிரதமர்   நஜிப்    அப்துல்   ரசாக்கின்   தனிப்பட்ட   வங்கிக்   கணக்குவழியாக  1எம்டிபி  பணத்தைப்    பெற்ற   முன்னாள்   பாஸ்   தலைவரின்   பெயரை    நாளை    பிற்பகல்  மணி   1.30க்குச்   செய்தியாளர்   கூட்டத்தில்    தெரிவிப்பேன்”,  என்று  ரபிசி   அறிக்கை  விடுத்துள்ளார்.

வெள்ளிக்கிழமை,   ஆதாரங்களுடன்   மலேசிய   ஊழல்தடுப்பு    ஆணையத்திலும்   அவர்  புகார்   செய்வார்.