அமைச்சர் நோ ஒமாருக்கு டிஎபி நாடாளுமன்ற உறுப்பினரின் கோரிக்கை கடிதம்

 
Dapdemandletterநகர்புற நல்வாழ்வு, வீடு மற்றும் ஊராட்சி அமைச்சர் நோ ஒமாருக்கு அனுப்பியுள்ள ஒரு கோரிக்கை கடிதத்தில் டிஎபி தைப்பிங் நாடாளுமன்ற உறுப்பினர் இஙா கோர் மிங் பிஎன் அல்லாதா நாடாளுமன்ற தொகுதிகளில் திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீட்டை ரத்து செய்யும் அவரது அமைச்சின் உத்தரவை மீட்டுக்கொள்ள வேண்டும் என்று கோரியுள்ளார்.

இக்கோரிக்கை கடிதம் அமைச்சின் ஊராட்சி இலாகாவின் இயக்குனர் அபு பாக்கார் ஜொஹாருக்கும் அனுப்பப்பட்டுள்ளது. அபு பாக்கார் இந்த உத்தரவை மார்ச் 17 இல் வெளியிட்டிருந்தார்.

பிஎன் அல்லாத நாடாளுமன்ற தொகுதிகளின் மக்களிடம் அமைச்சர் நோவும் ஊராட்சி இலாகா இயக்குனரும் மன்னிப்பு கோர வேண்டும் என்றும் இஙா அவரது கோரிக்கை கடிதத்தில் வலியுறுத்தியுள்ளார்.