அம்னோ இளைஞர்கள் மலாய், பூமிபுத்ரா சிறப்புரிமைகளைத் தொடர்ந்து தற்காப்பார்கள்

 

Todefendmalayrightsதேசிய உருமாற்றத் திட்டத்தை (டிஎன்50) நாட்டில் அமலாக்கம் செய்த போதிலும், மலேசிய அரசமைப்புச் சட்டத்தில் அளிக்கப்பட்டிருக்கும் மலாய் மற்றும் பூமிபுத்ராக்களுக்கான சிறப்புரிமைகளை அம்னோ இளைஞர்கள் தற்காப்பார்கள்.

அம்னோ இளைஞர்கள் இயக்கம் அதன் இன்றைய நிலையிலிருந்து ஒருபோதும் விட்டுக் கொடுக்காது என்று அம்னோ இளைஞர்கள் துணைத் தலைவர் கைருல் அஸ்வான் ஹருன் கூறினார்.

எனினும், 2050 இல், மலாய்க்காரர்கள் மற்றும் பூமிபுத்ராக்கள் ஆகியோருக்கு எவ்வித பங்கு வீத ஒதுக்கீடும் இன்றி அவர்கள் மற்ற மலேசியர்களுடன் சுமுகமான முறையில் போட்டியிட இயலும் என்று நம்புவதாக அவர் மேலும் கூறினார்.