தென் தாய்லாந்து பட்டாணியில் குண்டு வெடிப்பு: 58 பேர் காயம்

patani-darussalamதாய்லாந்து பட்டாணியில் நேற்று பிற்பகல் 2.30 மணியளவில் ஒரு வணிக வளாகத்தின் கார் நிறுத்துமிடத்தில் ஏற்பட்ட குண்டு வெடிப்பில் 58 பேர் கயமுற்றனர், இவர்களில் மூன்று சிறார்களும் அடங்குவர். இச்சம்பவத்தினை பட்டாணி காவல் துறை அதிகாரி பிரீச்சா பரசும்தாய் உறுதிபடுத்தினார்.

மேலும் அவர் தெரிவிக்கையில் இந்நிகழ்வின்போது இரண்டு முறை குண்டுகள் வெடித்ததாகவும் காயப்பட்டவகளில் இருவர் ஆபத்தான நிலையில் உள்ளதாகவும் இத்தாக்குதல் இச்சம்பவம் பட்டாணி இஸ்லாமிய பிரிவினை வாதிகளால் நிகழ்த்தப் பட்டிருக்கலாம் என தாங்கள் சந்தேகிப்பதாக கூறினார்.