கைருடின், மாத்தியாஸ் ஆகியோருக்கு எதிரான நாசவேலை குற்றச்சாட்டு திரும்பப்பெறப்பட்டது

 

Sabotagechargewithdrawnவெளிநாட்டில் 1எம்டிபி பற்றி செய்த புகார்கள் சம்பந்தமாக கைருடின் அபு ஹசான் மற்றும் வழக்குரைஞர் மாத்தியாஸ் சாங் ஆகியோருக்கு எதிராகச் சுமத்தப்பட்டிருந்த நிதி நாசவேலை குற்றச்சாட்டை அரசு தரப்பு மீட்டுக்கொண்டுள்ளது.

வழக்கைத் தொடர வேண்டாம் என்று தமக்கு பணிக்கப்பட்டிருப்பதாக துணை அரசு தரப்பு வழக்குரைஞர் அவாங் அர்மடாஜெயா அவாங் மாமுட் தெரிவித்தார்.

ஆகவே வழக்கை திரும்பப்பெற்றுகொள்வதற்காக மனு செய்கிறோம், ஆனால் அது குற்றச்சாட்டிலிருந்து விடுவிக்கப்பட்டதற்கு சமமானதல்ல என்று அவர் கூறினார்.

இதனைத் தொடர்ந்து எதிர்தரப்பு வழக்குரைஞர்கள் குற்றம் சாட்டப்பட்டிருப்பவர்களை விடுவிக்கக் கோரும் மனுவை நீதிமன்ற்த்தில் தாக்கல் செய்யப் போவதாக அறிவித்தனர்.