நாடாளுமன்றத்தைக் கலைக்கத் தயாரா? நஜிப்புக்கு கைருடின் சவால்

khairநேற்றைய  அம்னோ   பேரணியில்    பிரதமர்   நஜிப்   அப்துல்  ரசாக்   பொதுத்தேர்தல்   திடீரென்று   நடக்கலாம்   என்று   கோடிகாட்டியதைப்  பிடித்துக்கொண்ட    பத்து  கவான்   அம்னோ   முன்னாள்   துணைத்    தலைவர்   கைருடின்   அபு   ஹசான்   நாடாளுமன்றத்தை  விரைவில்  கலைக்கும்   துணிச்சல்   உண்டா  என்று    நஜிப்புக்குச்   சவால்   விடுத்தார்.

“அதிகம்    பேச   வேண்டாம்    என்று    நஜிப்பிடம்   சொல்லுங்கள்.  அவருக்கு   அவ்வளவு  நம்பிக்கை   இருந்தால்,    அவர்   ஓர்   ஆண்மகனாக    இருந்தால்,  நாடாளுமன்றத்தைக்  கலைத்து   14வது   பொதுத்   தேர்தலை    அறிவிக்கட்டும்”,  என  கைருடின்   ஓர்   அறிக்கையில்    கூறினார்.

நேற்றிரவு   அம்னோவின்   71ஆம்   ஆண்டு  நிறைவுவிழாவில்,   80ஆயிரம்  ஆதரவாளர்களிடையே   உரையாற்றிய    நஜிப்  “நாம்  வலுவாக  இருக்கிறோமா?  தயராக   இருக்கிறோமா?  நாளையே   நாடாளுமன்றத்தைக்  கலைக்கலமா?”,  என்று  வினவ    கூட்டத்தினர்   ஆம்  என்று   முழங்கினர்.