காணாமல் போன ஆர்எம்எஎப் ஜெட் கண்டுபிடிக்கப்பட்டது, இரு விமானிகளும் இறந்த விட்டனர்

 

airforceமுன்னதாக காணாமல் போய்விட்டதாக அறிவிக்கப்பட்ட ஹாக் 108 இன் இரு விமானிகளும் இறந்து கிடக்கக் காணப்பட்டனர்.

இன்று,பின்னேரம் 2.20 அளவில், திரங்கானு, கெமமான், சுகாய்க்கு அருகிலுள்ள சதுப்பு நிலத்தில் அந்த ஹாக் 108 விமானத்தின் இரு விமானிகளும் இறந்து கிடக்கக் காணப்பட்டனர்.

அஸ்ட்ரோ அவானி அவ்விருவரையும் யாஸ்மி முகமட் யூசோப் மற்றும் முகமட் ஹஸ்ரி ஸகாரி என்று அடையாளம் கண்டுள்ளது.

இன்று காலை மணி 11.30 க்கு அந்த விமானத்துடன் தொடர்பு இல்லாமல் போய்விட்டது. விமானம் புறப்பட்ட அரை மணி நேரத்திற்குப் பின்னர் இது நடந்தது.