கைதியைத் தப்பவிட்ட வழக்கில் போலீசார் எண்மரும் பிணையில் விடுதலை

polisபோலீஸ்  காவலிலிருந்த   கைதி   தப்பியோடிய   வழக்கில்   விசாரணைக்கு   உதவியாக   தடுத்து  வைக்கப்பட்டிருந்த  எட்டுப்  போலீசாரும்   அவர்களின்   தடுப்புக்  காலம்   முடிவுக்கு  வந்ததை   அடுத்து   பிணையில்   விடுவிக்கப்பட்டனர்.

27க்கும்  59  வயதுக்குமிடைப்பட்ட   அவ்வெண்மரும்   வழக்கு  தொடர்பான   விசாரணை   முடியும்வரை   பணி  இடைநீக்கம்   செய்யப்பட்டிருப்பதாக    பினாங்கு   போலீஸ்   தலைவர்    சுவா  கீ  லை   கூறினார்.

“56-வயது   மீன்வரின்   தடுப்புக்காவல்    மேல்விசாரணைக்காக   மேலும்    மூன்று   நாள்களுக்கு   நீட்டிக்கப்பட்டிருக்கிறது. போலீஸ்காரர்களைப்  பொருத்தவரை     அவர்கள்   சம்பந்தப்பட்டிருப்பதாக    தெரிய    வந்தால்   நீதிமன்றத்தில்   குற்றஞ்சாட்டப்படுவர்”,  என்றவர்   நேற்று   தெரிவித்தார்.