அம்னோ “திருடர்கள் கட்சி”, சாட்சிக் கூண்டிலிருந்து மகாதிர் தாக்குகிறார்

 

Muturnமுன்னாள் பிரதமர் மகாதிர் இன்று பின்னேரத்தில் கோலாலம்பூர் உயர்நீதிமன்றத்தில் சாட்சியமளித்த போது பிரதமர் நஜிப் மீது பீரங்கித் தாக்குதல் நடத்தினார்.

மகாதிரின் கருத்துப்படி, தற்போதைய தலைவரின் கீழ் அம்னோ ஒரு “கொள்ளைக்காரர்கள் மற்றும் திருடர்கள்” கட்சி ஆகியுள்ளது.

இதன் காரணமாக, நஜிப்பை அதிகாரத்திலிருந்து நீக்க விரும்புவதை மகாதிர் ஒப்புக்கொண்டார்.

“அம்னோ ஒரு கொள்ளைக்காரக் கட்சி. தலைவரின் செயல் காரணமாக அது திருடுகிறது என்று குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அது மலேசியாவுக்கு கெட்ட பெயரைத் தந்துள்ளது. அது பழைய அம்னோ அல்ல, ஆனால் அது நஜிப்பின் கட்சி”, என்று அவர் கூறினார்.

நஜிப்பின் ஊடக உதவியாளர் தெங்கு ஷரிப்புடின் தெங்கு அஹமட்டின் வழக்குரைஞர் ஜஹாபார்டீன் குறுக்கு விசாரணை செய்த போது மகாதிர் இவ்வாறு கூறினார்.

இருபது ஆண்டுகளுக்கு மேல் கட்சியை வழிநடத்திய அவர், கட்சி பற்றி கவலைப்படவில்லையா என்று ஜஹாபார்டீன் மகாதீரை கேட்டார்.

தெங்கு ஷரிப்புடினுக்கு எதிராக மகாதிரின் மகன் முக்ரீஸ் தொடர்ந்துள்ள அவதூறு வழக்கில் மகாதிர் சாட்சியமளித்தார்.