1எம்டிபி: சிங்கப்பூரில் ஒருவர் சிறையிடப்பட்டார், மலேசியாவில் எந்த நடவடிக்கையும் இல்லை; ஏஜி விளக்குவாரா?

gobindமலேசியாவில்  1எம்டிபி    விசாரணைகளில்  இதுவரை   எந்தவொரு  முடிவும்   தெரியவில்லை.  ஆனால்,  சிங்கப்பூரில்   ஒருவர்   சிறையிடப்பட்டிருக்கிறார்.  இது  ஏன்   என்று   சட்டத்துறைத்    தலைவர் (ஏஜி)  விளக்க  வேண்டும்.

“மற்ற   நாடுகளில்    புலன்  விசாரணை   முடிந்து   வழக்கு   தொடுக்கப்பட்டுள்ளது.

“குற்றவாளிகள்   என்று  கண்டுபிடிக்கப்பட்டவர்கள்  தண்டனை   அனுபவிக்கிறார்கள்.  ஆனால்,  இங்கு     எதுவுமே   தொடங்கவில்லை.

“சட்டத்துறைத்   தலைவர்தான்  இது  குறித்து   விளக்க    வேண்டும்”,  என   பூச்சோங்   எம்பி   கோபிந்த்   சிங்  டியோ   ஓர்   அறிக்கையில்    கூறினார்.