மலேசியரான பிரபாகரனுக்கு சிங்கப்பூரில் தூக்குத் தண்டனை நிறைவேற்றப்பட்டது

prabaபோதைப்  பொருள்  கடத்தலுக்காக    மரண  தண்டனை   விதிக்கப்பட்ட    மலேசியரான   எஸ்.பிரபாகரன்   இன்று  காலை   சிங்கப்பூரில்   தூக்கிலிடப்பட்டார்.

ஜோகூர்   பாருவைச்   சேர்ந்த    29-வயது   பிரபாகர்   காலை    6மணிக்கு   சாங்கி   சிறையில்    தூக்கிலிடப்பட்டார்.

காலை    மணி    10க்கு  அவருடைய  உடலை    அவரின்   குடும்பத்தார்  பெற்றுக்கொண்டதாக    மலேசியன்   இன்சைட்   கூறியது.

தண்டனையை   நிறுத்திவைக்க  பிரபாகரனின்   வழக்குரைஞர்கள்   செய்துகொண்ட   மனுவை     சிங்கப்பூர்     முறையீட்டு   நீதிமன்றம்,  அதற்குச்   சட்டத்தில்   இடமில்லை    என்று    கூறி   நேற்று    தள்ளுபடி    செய்தது .