98இல் அன்வாரைப் பணிநீக்கம் செய்ததில் மகாதிருக்கு வருத்தமில்லை

dr mடாக்டர்    மகாதிர்     முகம்மட்,    1998இல்  துணைப்  பிரதமராக   இருந்த   அன்வார்  இப்ராகிமைப்   பணிநீக்கம்    செய்த  முடிவை   மீண்டும்    தற்காத்துத்தான்   பேசினார்.

“அப்போதைய   சூழலுக்கு   ஏற்ப  நடந்துகொண்ட”தாக    முன்னாள்   பிரதமர்  கூறினார்.

கடந்தகாலத்தைப்   பற்றி    மகாதிர்   அதிகம்   விவரிக்க   விரும்பவில்லை.

“இப்போது   நிலைமை   மாறிவிட்டது.  பழசையே   கிளறிக்   கொண்டிருந்தால்     எல்லாரோடும்   இணைந்து   பணியாற்ற   முடியாது.

“காலம்  முழுவதும்    எதிரிகளுடன்   போராடிக்  கொண்டிருக்கத்தான்    நேரும். அது  நல்லதல்ல”,  என    முகநூலில்   நேரடி   கேள்வி-பதில்  நிகழ்ச்சியொன்றில்  மகாதிர்   கூறினார்.

தாய்லாந்தின்   நேஷன் பல்லூடகக்  குழுமத்    தலைவர்    சுத்திஷாய்   யூன்   அன்வாரை    நீக்கியது   குறித்து   வருத்தப்படுகிறீர்களா    என்று   கேட்டதற்கு  மகாதிர்   அவ்வாறு   பதிலளித்தார்.