ஹிஷாமுடின் : மகாதீருக்கு சிந்தனை வறட்சி ஏற்பட்டுவிட்டது

hishநஜிப் பிரதமர் பதவியிலிருந்து விலகினாலும், தான் அம்னோவில் இணையப்போவதில்லை என்று முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர் கூறியுள்ளது, அவருக்குச் சிந்தனை வறட்சி ஏற்பட்டுள்ளதையேக் காட்டுகிறது என ஹிஷாமுடின் உசேன் கூறினார்.

அம்னோவிலிருந்து பதவி விலகுவதும், மீண்டும் சேர்ந்துகொள்வதும் மகாதீருக்குப் புதியதல்ல. இதற்கு முன் பலமுறை இது நிகழ்ந்துள்ளது என அம்னோ துணைத் தலைவருமான ஹிஷாமுடின் தெரிவித்தார்.

“மகாதீருக்கு சிந்தனை வறட்சி ஏற்பட்டுவிட்டது. இங்குக் கேள்வி என்னவென்றால், அம்னோ உறுப்பினர்கள் மகாதீரை மீண்டும் ஏற்றுக்கொள்வார்களா, இல்லையா  என்பதே”, என்றார் அவர்.

இன்று, பண்டார் துன் ரசாக் அம்னோ பிரிவின் பேராளர் மாநாட்டைத் தொடக்கி வைத்தப்பின் நடந்த செய்தியாளர் கூட்டத்தில், பத்திரிக்கையாளர்களின் கேள்விக்குப் பதிலளிக்கையில் அவர் இவ்வாறு கூறினார்.