சொத்து விவகாரம்: ஸாகிட் பதில் அளிக்காமல் பறந்து விட்டார்

 

millionsDPMஉள்துறை அமைச்சர் அஹமட் ஸாகிட் ஹமிடியின் ஒன்பது இலக்க சொத்து பற்றி மகாதிரின் குற்றச்சாட்டிற்கு பதில் அளிக்கும்படி இன்று கேட்டுக்கொள்ளப்பட்டார்.

இன்று நாடாளுமன்றத்தில் நீர் வளங்கள் குழு அனைத்து மாநிலத் தலைமை அதிகாரிகளுடன் நடத்திய ஒரு கூட்டத்திற்கு வருகையளித்திருந்த உள்துறை அமைச்சர் ஸாகிட்டை செய்தியாளர்கள் சூழ்ந்து கொண்டு மகாதிர் அவரது சொத்து அறிவிப்பு சம்பந்தமாக கூறியிருந்த குற்றச்சாட்டுக்கு பதில் கூறுமாறு கேட்டனர்.

ஸாகிட் எப்போதும் செய்தியாளர்களிடம் மிகத் தாராளமாக நடந்துகொள்ளும் போக்கைக் கொண்டவர். ஆனால், இம்முறை கேட்கப்பட்ட கேள்விகளைப் புறக்கணித்து விட்டு அவரது மெய்க்காவலர்கள் அவர் போவதற்கான வழியை சரிசெய்து கொடுத்தவுடன் ஸாகிட் அங்கிருந்து பறந்தோடி விட்டார்.