சிறைச்சாலைக்கு அன்வாரை ஏற்றிச்சென்ற கார் விபத்துக்குள்ளானது

Sivarasa-Anwarகோலாலம்பூர் மருத்துவமனையிலிருந்து, சுங்கை பூலோ சிறைச்சாலைக்கு அன்வார் இப்ராஹிம்மை ஏற்றிச் சென்ற வாகனம் விபத்துக்குள்ளானது.

“நல்ல வேளையாக, அன்வாருக்குப் பெரிய காயங்கள் ஏதும் ஏற்படவில்லை, அவர் அதிர்ச்சிக்குள்ளாகி இருந்தார். சிறைச்சாலையில் அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்தனர்,” என்று அன்வாரின் வழக்குரைஞர் சிவராசா இராசையா கூறினார்.

இன்று மதியம் 12.30 மணியளவில், கோலாலம்பூர் மருத்துவமனையிலிருந்த அன்வாரை, சுங்கை பூலோ சிறைச்சாலைக்கு ஏற்றிச்சென்ற கார் மற்றும் வேன், சௌஜானா உத்தாமா அருகே, போக்குவரத்து சந்திப்பில் விபத்துக்குள்ளானது.

சுகாதார அமைச்சின் துணை இயக்குநர், டாக்டர் எஸ்.ஜெயிந்திரன், அன்வாரை சந்தித்து, அவருக்கு மேலதிக சிகிச்சைகள் தேவைப்படுமா என்று விசாரிக்கத் திட்டமிட்டுள்ளார்.

கடந்த செவ்வாய் அன்று, இரத்த அழுத்தம் காரணமாக, அன்வார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.