கட்கோ நில விவகாரம் – லோட்டஸ் குழும உரிமையாளர்களுக்கு 3 நாள் தடுப்புக் காவல்

ரெனாநேற்று, மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தால் (எம்.ஏ.சி.சி.), கட்கோ நில வழக்குத் தொடர்பில் கைது செய்யப்பட்ட லோட்டஸ் குழும உரிமையாளர்கள் இருவருக்கும், இன்று தொடக்கம் 3 நாள்கள் தடுப்புக்காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது.

புத்ரா ஜெயா உயர் நீதிமன்றத்தில், மஜிஸ்திரேட் முகமட் நோர் ஹஃபிட்ஷுடின் யூசோப், அந்த இரு சகோதரர்களுக்கும் 3 நாள்கள் தடுப்புக்காவல் உத்தரவு பிறப்பித்தார்.

அதேசமயம், கடந்த வாரம் திங்கட்கிழமை கைது செய்யப்பட்டு, ஒரு வாரமாக தடுப்புக் காவலில் இருந்த 69 வயதுடைய இடைத்தரகர், எம்.ஏ.சி.சி.-யின் ஜாமினில் விடுதலை செய்யப்பட்டார்.

நேற்று காலை, ரெனா.துரைசிங்கம்  மற்றும் ரெனா.இராமலிங்கம் இருவரும் கிள்ளானில் இருவேறு இடங்களில் எம்.ஏ.சி.சி. அதிகாரிகளால் கைது செய்யப்பட்டனர்.