சனுசி ஜுனிட் காலமானார்

முக்ரிஸ் மஹாதீர் எஃப்.சி. முகநூலின் கூற்றுப்படி, பந்தாய் டாலாமில் உள்ள அவரது இருப்பிடத்தில், இன்று காலை அவர் காலமானார்.

சனிக்கிழமை, காலை 6 மணியளவில், அதிகாலை பிரார்த்தனைக்காக காத்திருந்தபோது, அவர் இறந்ததாக அவரின் மகன் சொன்னார்.

அவருக்கு வயது 75. கோலாலம்பூர், புக்கிட் டாமான்சாரா, சைடினா பள்ளிவாசலில் தொழுகைக்குப் பின்னர் அவரது உடல் அடக்கம் செய்யப்படும்.

1981-ஆம் ஆண்டில், மாநில மற்றும் கிராமப்புற மேம்பாட்டு அமைச்சராகவும் அதன் பின்னர், 1986-ஆம் ஆண்டில் விவசாய அமைச்சராகவும் அவர் பணியாற்றியுள்ளார்.

மேலும், 1996 முதல் 1999 வரையில் கெடா மந்திரி பெசாராகவும் அவர் பொறுப்பேற்று இருந்தது குறிப்பிடத்தக்கது.