எகிப்தில் 75 பேருக்கு மரண தண்டனை..

எகிப்தில் அதிபர் பதவி நீக்கத்துக்கு எதிராக செயல்பட்டு கலவரத்தில் ஈடுபட்ட 75 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்ட்டது.

எகிப்தில் அதிபராக இருந்த முகமது மோர்சி கடந்த 2013-ம் ஆண்டில் பதவி நீக்கம் செய்யப்பட்டார். அதை தொடர்ந்து அவரது முஸ்லிம் சகோதரத்துவ கட்சி தொண்டர்கள் கலவரத்தில் ஈடுபட்டனர். அதில் 100-க்கும் மேற்பட்ட போலீசார் கொல்லப்பட்டனர்.

எனவே 700 பேர் மீது கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கு விசாரணை முடிந்து தண்டனைகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் நேற்று 75 பேருக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது.

-athirvu.in