சாலைப் பாதுகாப்பு கோரி டாக்காவை முடக்கிய வங்க தேசப் பதின் வயதினர்

மிக வேகமாக சென்ற பேருந்தால் பதின் வயதினர் 2 பேர் கொல்லப்பட்ட பின்னர், ஆயிரக்கணக்கான வங்க தேச பள்ளி மாணவர்கள் 5வது நாளாக ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்த சம்பவத்திற்கு நீதி வேண்டியும், சாலை பாதுகாப்பு நடவடிக்கைகளையும் கோரி, தலைநகர் டாக்காவின் செயல்பாடுகளை இவர்கள் முடங்க செய்துள்ளனர்.

இந்த மாணவர்கள் வெளிவேடம் போடுவதாக ஓர் அமைச்சர் குற்றஞ்சாட்டியுள்ளது மேலும் கோபத்தை மூட்டியுள்ளது.

நாடு முழுவதுமுள்ள உயர்நிலை பள்ளிகளை மூடியுள்ள கல்வி அமைச்சகம், மாணவர்களின் கோரிக்கைகள் கவனத்தில் எடுத்துக்கொள்ளப்படும் என்று தெரிவித்திருக்கிறது.

ஆனாலும், போராட்டங்கள் முடிவுக்கு வரவில்லை. -BBC_Tamil