விசாரணைக்காக மெனாரா கேபிஜேயிக்கு ரோஸ்மாவும் அவரது இரு மகன்களும் வந்துள்ளனர்

 

ரோஸ்மா மன்சோரும் அவரது இரு மகன்களும், நோரஸ்மான் மற்றும் ரிஸா அஸிஸ், போலீசாரால் விசாரிக்கப்படுவதற்காக மெனாரா கேபிஜேயிக்கு இன்று காலை வந்தனர்.

அவர்கள் மூவரும் மெனாரா கேபிஜே கட்டடத்திற்கு காலை மணி 9.40-க்கு வந்தனர். அவர்களை வரவேற்பதற்கு போலீசார் எவரும் அங்கு இல்லை. அவர்களுடைய வழக்குரைஞர்கள் உடனிருந்தனர். அங்கிருந்த செய்தியாளர்களைத் தவிர்த்து விட்டு அவர்கள் நேராக லிப்ட்டிற்கு சென்றனர்.

இருப்பினும், மலேசியாகினி அதன் முந்தையச் செய்தியில் அவர்கள் மூவரும் நகைகள் சம்பந்தமாக இன்று விசாரிக்கப்படுவர் என்று கூறியிருந்தது.