சிரியா அகதிகளுக்கு உதவ தேவைப்படும் ஐந்தரை பில்லியன் டாலர்

பக்கத்து நாடுகளில் பராமரிக்கப்படும் சிரியாவில் இருந்து வந்த அகதிகளுக்கு உதவ ஐந்தரை பில்லியன் டாலர் தொகை தேவைப்படுவதாக ஐக்கிய நாடுகள் அவை கூறியுள்ளது.

இந்த தொகை துருக்கி, லெபனான், ஜோர்டன் மற்றும் பிற நாடுகளில் இடம்பெயர்ந்து வாழும் மக்களின் கல்வி, வேலைவாய்ப்புகள் மற்றும் பிற உதவிகளுக்காக செலவு செய்யப்படும்.

அடுத்த ஆண்டு 2 லட்சத்து 50 ஆயிரம் அகதிகள் சிரியாவுக்கு திரும்பலாம் என நம்புவதாக ஐக்கிய நாடுகள் அவை தெரிவிக்கிறது. ஆனால் 50 லட்சத்துக்கும் அதிகமானோருக்கு உடனடியாக திரும்பி செல்லும் நோக்கம் இல்லை என்று அது கூறியுள்ளது.

நாடு கடந்த நிலையில் பிறந்த 10 லட்சம் குழந்தைகளும் இந்த எண்ணிக்கையில் அடங்கியுள்ளனர்.

திரும்பி செல்வது கடினமானதும், ஆபத்தானதுமாக அமையலாம். சில இடங்களில் சண்டைகளும், ஆங்காங்கு மேதல்களும் தொடர்ந்து வரும் நிலையில், அந்த பகுதிகளில் வெடிக்காத குண்டுகள் குப்பைகளைபோல காணப்படுகின்றன.

-BBC_Tamil