சொத்து அறிவிப்பில் தவறான தகவல்கள் கொடுக்கும் எம்பிகளுக்குத் தண்டனை

இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட ஒரு தீர்மானத்தின்படி சொத்து விவரங்களை அறிவிக்கும் எம்பிகள் அதில் தவறான தகவல்களைக் கொடுத்தால் மூன்றாண்டுவரை சிறைத்தண்டனை பெறலாம்.

இதைத் தெரிவித்த அந்தத் தீர்மானத்தைத் தாக்கல் செய்த பிரதமர்துறை அமைச்சர் லியு வுய் கியோங், அத் தீர்மானத்தின்படி எம்பிகள் அனைவரும் அவர்களின் சொத்து விவரங்களை எம்ஏசிசி-இடம் அறிவிக்க வேண்டும் என்றார்.