எரியும் வீட்டில் கத்திக்குத்துக் காயங்களுடன் இறந்து கிடந்த வயோதிக தம்பதிகள்

நேற்று சிரம்பான், தாமான் தேசா மெலாத்தியில் எரியும் வீடு ஒன்றில் ஒரு வயதானவரும் அவரின் மனைவியும் உடல் முழுக்கக் கத்திக்குத்துக் காயங்களுடன் இறந்து கிடக்கக் காணப்பட்டதாக போலீஸ் தெரிவித்தது.

டான் கிம் ஜோ,73, என்ற அந்த ஆடவரும் அவரின் மனைவியான இங் சொங் ஹுவா,67, -வும் பத்தாண்டுகளாக அந்த வீட்டில் வசித்து வந்ததாக நெகிரி செம்பிலான் போலீஸ் தலைவர் முகம்மட் மாட் யூசுப் கூறினார்.

“தீ பிடித்துக்கொண்ட ஒரு வீட்டில் கத்திக்குத்துக் காயங்களுடன் இருவர் இறந்து கிடப்பதாக நேற்றிரவு 10.45க்கு எங்களுக்குத் தகவல் கிடைத்தது”, என்றாரவர்.