தஞ்சோங் பியாய் இடைத் தேர்தல் நவம்பர் 16-இல்

தேர்தல் ஆணையம், ஜோகூர், தஞ்சோங் பியாய் நாடாளுமன்ற தொகுதிக்கான இடைத் தேர்தல் நவம்பர் 16-இல் என்று அறிவித்துள்ளது.

வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல் செய்ய வேண்டிய நாள் நவம்பர் 2.

அத்தொகுதி, செப்டம்பர் 21-இல் பெர்சத்து எம்பி டாக்டர் முகம்மட் ஃபாரிட் முகம்மட் ரஃபிக் காலமானதை அடுத்து காலியானது.

நாட்டின் அரசியல் வானில் இன, சமய விவகாரங்கள் ஆதிக்கம் செலுத்திக் கொண்டிருக்கும் வேளையில் மக்களின் ஆதரவு யாருக்கு- பக்கத்தான் ஹரப்பானுக்கா, அம்னோ-பாஸ் ஒத்துழைப்புக் கூட்டணிக்கா என்பதைத் தீர்மானிக்கும் தேர்தலாக இது அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

14வது பொதுத் தேர்தலில், அத்தொகுதியில் ஃபாரிட் மசீசவின் வீ ஜெக் செங்கை வென்றார். ஆனால், 524 வாக்குகள் என்ற மிகக் குறுகிய வாக்கு வேறுபாட்டில் பெற்ற வெற்றி அது.