வுஹானுக்கு விமானங்களை நிறுத்துகிறது ஏர் ஏசியா

கோத்தா கினாபாலு, பாங்காக் மற்றும் ஃபூகெட் இடங்களிலிருந்து சீனா, வுஹானுக்கு செல்லும் ஏர் ஏசியா விமானங்களின் தற்காலிக நிறுத்தம் பிப்ரவரி 29 வரை நீட்டிக்கப்படும்.

வூஹானில் ஆரம்பித்த கொரோனா வைரஸில் இறந்தவர்களின் எண்ணிக்கை 106-ஐ எட்டியதால் இந்த முடிவு எடுக்கப்பட்டிருக்கின்றது.

ஏர் ஏசியா நிலைமையை கண்காணித்து வருவதாகவும், நிலவரத்தை கண்டு, மேலும் அதன் கொள்கைகளை அறிவிக்கும் உரிமையைக் கொண்டுள்ளது என்றும் சொன்னது.