போலீஸ் அதிகாரி மீது குற்றச்சாட்டு

போதைப்பொருள் வழக்கில் ஆவணங்கள் பொய்யானவை என்று ஒருவர் புகார் அளித்ததைத் தொடர்ந்து, போலீஸ் அதிகாரி ஒருவர் மீது இன்று ஷா ஆலாமில் உள்ள மாஜிஸ்திரேட் நீதிமன்றத்திற்கு குற்றம்சாற்றப்பட அழைத்து வரப்பட்டார்.

எவ்வாறாயினும், அந்த அதிகாரி மீது குற்றச்சாட்டு சுமத்தப்படுவதற்கு முன்னர், ஊடகங்கள் உட்பட இந்த வழக்கில் சம்பந்தப்படாத அனைவரும் நீதிமன்ற அறையை காலி செய்யுமாறு அரசு தரப்பு துணை வக்கீல் நூர் ஷஸ்வானி நீதிமன்றத்தை கேட்டுக் கொண்டார்.

இந்த வழக்கில் முக்கிய விஷயங்களை கையாளவேண்டியதால் தான் இவ்வாறு செய்யப்பட்டதாக தெரிகிறது.