பினாங்கு தைப்பூச நிகழ்வு திட்டமிட்டபடி நடக்கும்

பினாங்கு தைப்பூசம் ரத்து செய்யப்படவில்லை, போலி செய்திகளைக் நம்ப வேண்டாம்.

கொரோனா வைரஸ் பரவியதால் பினாங்கு நகரில் ஆண்டுதோறும் நடைபெறும் தைப்பூச நிகழ்வு ரத்து செய்யப்படும் எனும் போலி செய்திகளை பரப்பியவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு பினாங்கு இந்து மதம் அறக்கட்டளை வாரியம் ஆணையாளர்/ Penang Hindu Endowment Board Commissioner சதீஸ் முனியாண்டி கேட்டுக் கொண்டார்.

பிப்ரவரி 8 ஆம் தேதியின் தைப்பூச நிகழ்வு திட்டமிட்டபடி நடக்கும் என்று டி.ஏ.பி.-யின் பாகான் டாலாம் சட்டமன்ற உறுப்பினரான சதீஸ் கூறினார்.