கொரோனா கிருமி: சுகாதார அவசரநிலையை அறிவிக்கிறது இந்தோனேசியா

இந்தோனேசிய அதிபர் ஜோகோ விடோடோ இன்று கொரோனா வைரஸ் தொற்று தொடர்பாக ஒரு தேசிய பொது சுகாதார அவசரநிலை நாட்டைத் தாக்கியுள்ளது என்றும் குறைந்த வருமானம் உடையவர்களுக்கு உதவும் நடவடிக்கைகளை அறிவித்துள்ளதாகவும் தெரிவித்தார்.

சமூக நலனை விரிவுபடுத்துதல், உணவு உதவி மற்றும் மின்சார கட்டண தள்ளுபடிகள் மற்றும் விலக்குகளை வழங்குதல் ஆகியவை இந்த நடவடிக்கைகளில் அடங்கும் என்றார்.

கோவிட்-19 பரவுவதைத் தடுக்கும் நடவடிக்கையாக இந்தோனேசியா முன்னதாக நாட்டில் வெளிநாட்டு குடியினரின் நுழைவு மற்றும் போக்குவரத்தை தடை செய்தது.

இருப்பினும், குடியிருப்பு அனுமதி மற்றும் தூதரக விவகாரம் குறித்த வருகைகள் உள்ளவர்களுக்கு விதிவிலக்குகள் வழங்கப்படுகின்றன.

அரசாங்கம் அவ்விதிமுறைகளை இன்று அமல்படுத்தும் என்று தெரிகிறது.

இந்தோனேசியா, வெளிநாட்டிலிருந்து திரும்பும் தனது குடிமக்களுக்கான சோதனைகளை கடினமாக்கும் என்று கூறியுள்ளது.