விரைவில் மீளுமா இத்தாலி?

உலகிலேயே இத்தாலியில்தான் கொரோனாவால் அதிகம் பேர் இறந்துள்ளனர். 15,000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த இத்தாலியில் தற்போது சற்று நம்பிக்கை தரும் வகையான செய்திகள் வெளியாகின்றன.

தீவிர சிகிச்சை பிரிவில் இருக்கும் நோயாளிகளின் எண்ணிக்கை முதன்முறையாக குறைந்துள்ளது. தினமும் கொரோனாவால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும் கடந்த 8 நாட்களாக தொடர்ந்து குறைந்து கொண்டே வருகிறது.

கொரோனா வைரஸ் தொற்றால் இத்தாலியில் 1,24,632 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த சில வாரங்களாக உயிரிழப்புகளின் எண்ணிக்கை புதிய உச்சத்தை தொட, தற்போது அது குறைந்து வருகிறது.

BBC.TAMIL