கொரோனா தடுப்பூசி தயார் நாளை முதல் மனிதர்கள் மீதான சோதனை தொடங்கும்

ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக விஞ்ஞானிகள் தயாரித்துள்ள கொரோனா தடுப்பூசி மனிதர்கள் மீதான சோதனை நாளை முதல் தொடங்கும் என்று இங்கிலாந்து அரசு அறிவித்து உள்ளது.

லண்டன்; ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்களால் உருவாக்கப்படும் COVID-19 தடுப்பூசியின் மனித சோதனை வியாழக்கிழமை முதல் தொடங்கும் என்று இங்கிலாந்து அரசு செவ்வாய்க்கிழமை அறிவித்தது.

கடந்த வாரம் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக விஞ்ஞானிகள் அதிவேக தடுப்பூசி தயாரிக்கப்பட்டு வருவதாகவும், செப்டம்பர் மாதத்திற்குள் தடுப்பூசி கிடைக்கும் என்று கூறினர்.அதன்படி தடுப்பூசி பணிகள் நிறைவடைந்து உள்ளன.

இங்கிலாந்தின்  சுகாதார செயலாளர் மாட் ஹான்காக் நிருபர்களிடம் கூறியதாவது:-

ஆக்ஸ்போர்டு ஆராய்ச்சி குழுவுக்கு அவர்களின் மருத்துவ பரிசோதனைகளுக்கு நிதியளிக்க அரசாங்கம் 20 மில்லியன் பவுண்டுகள் வழங்கும்.  லண்டனின் இம்பீரியல் கல்லூரி ஆராய்ச்சியாளர்களுக்கு மேலும் 22.5 மில்லியன் பவுண்டுகள் வழங்கப்படும்

மருந்துகள் மற்றும் சுகாதார ஒழுங்குமுறை நிறுவனத்துடன்  இணைந்து செயல்படும் சோதனை செயல்முறைகளை குழு துரிதப்படுத்தியுள்ளது. இதன் விளைவாக, ஆக்ஸ்போர்டு திட்டத்தின் தடுப்பூசி நாளை முதல் மனிதர்கள் மீது சோதனை செய்யப்படும்.கொரோனா வைரஸ் ஒரு சக்திவாய்ந்த எதிரி. ஆனால் மனித அறிவின் சக்தி அதை விட வலுவானது என்று நான் நம்புகிறேன். நீண்ட காலத்திற்கு கொரோனா வைரஸைத் தோற்கடிப்பதற்கான சிறந்த வழி இந்த தடுப்பூசி ஆகும் என கூறினார்.

malaimalar