அமெரிக்கா: காற்றில் பறந்த வங்கி பணத்தை கைநிறைய அள்ளிச்சென்ற மக்கள்..!

சாலையில் கிடந்த பணத்தை எடுத்த நபர்களிடமிருந்து பணத்தை திரும்ப பெறும் முயற்சியில் அந்த நாட்டு காவல்துறை ஈடுபட்டுள்ளது.

கலிபோர்னியா, அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ளூர் வங்கியிலிருந்த பணமானது எப்.பி.ஐ-க்கு டிரக் வாகனம் மூலம் எடுத்துச்செல்லப்பட்டது. இந்த நிலையில் திடீரென டிரக் வாகனத்தின் கதவு திறந்து சாலையில் பணம் பறக்க தொடங்கியது. இதனையடுத்து அவ்வழியாக சென்று கொண்டிருந்த வாகன ஓட்டிகள் அனைவரும் வாகனத்தை நிறுத்திவிட்டு பணத்தை எடுக்க தொடங்கினர். இதனால் அந்த நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. காவல்துறையினர், சாலையில் கிடந்த பணத்தை எடுத்த நபர்களிடமிருந்து பணத்தை திரும்ப பெறும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும், பணத்தை எடுத்தவர்கள் திரும்ப தர வேண்டும் என்று வங்கி நிர்வாகம் அளித்த அறிவிப்பை முன்னிட்டு பலரும் தாங்கள் எடுத்த பணத்தை திரும்ப செலுத்தி வருகின்றனர். மேலும், அந்த நெடுஞ்சாலையில் இருந்த கண்காணிப்பு கேமரா மூலமாக எந்த வாகனம் அந்த சாலை வழி சென்றுள்ளது என்பதை வைத்து பணத்தை எடுத்தவர்களிடமிருந்து காவல்துறையினர் திரும்ப பெற உள்ளனர். பணத்தை கொண்டுசென்ற வாகன ஓட்டுநர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

dailythanthi