8 நாடுகளுக்கு விதிக்கப்பட்ட பயண கட்டுப்பாடு நீக்கம் – அமெரிக்கா அறிவிப்பு

அதிபர் ஜோ பைடன்

வாஷிங்டன்: ஒமைக்ரன் வைரஸ் தொற்றை தடுக்கும் வகையில் தென் ஆப்பிரிக்க பிராந்தியத்தில் உள்ள 7 நாடுகளில் இருந்து வரும் விமானங்களுக்கு உலக நாடுகள் பல தடை விதித்தன.

தென் ஆப்பிரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்ட ஒமைக்ரான் வகை கொரோனா வைரஸ் ஐரோப்பாவில் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி உள்ளது.

அங்கு கண்டுபிடிக்கப்பட்ட இந்த வைரஸ் அண்டை நாடுகளிலும் பரவி இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனால் தென் ஆப்பிரிக்க பிராந்தியத்தில் உள்ள 7 நாடுகளில் இருந்து வரும் விமானங்களுக்கு ஜெர்மனி, இத்தாலி, இங்கிலாந்து உள்ளிட்ட பல்வேறு உலக நாடுகள் தடை விதித்தன.

இதற்கிடையே, தென் ஆப்பிரிக்க பிராந்தியத்தில் உள்ள 7 நாடுகளுக்கு பயணம் செய்ய அமெரிக்காவும் தடை விதித்தது.

இந்நிலையில், போட்ஸ்வானா, தென் ஆப்பிரிக்கா, மொசாம்பிக், ஜிம்பாப்வே, நமீபியா, எஸ்வாடினி, லெசோதோ மற்றும் மாளவி ஆகிய 8 தென் ஆப்பிரிக்க நாடுகளில் இருந்து வரும் பயணிகள் நுழைய விதித்திருந்த தடையை அமெரிக்க அதிபர் ஜோ பைடன் ரத்து செய்தார் என வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.

dailythanthi