அஸ்மின்: யார் இந்த RPK எங்களுக்கு ஆணையிட?

கட்சி இந்தத் திசையில்தான் போக வேண்டும், இதைத்தான் செய்ய வேண்டும் என்று கூற ராஜா பெட்ரா கமருடினுக்கு என்ன உரிமை இருக்கிறது என்று பிகேஆர் கேள்வி எழுப்பியுள்ளது.

“கட்சிக்குக் கட்டளை இட ராஜா பெட்ரா யார்? அவர் ஓர் உறுப்பினராகக்கூட இல்லை. நாட்டுடன் அவருக்கிருந்த தொடர்பும் அறுந்து போய்விட்டது.” இன்று பெட்டாலிங் ஜெயாவில் கட்சித் தலைமையகத்தில் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் துணைத் தலைவர் அஸ்மின் அலி இவ்வாறு கூறினார்.

ஒரு நேரத்தில் பிகேஆரின் இதயக்கனியாகவும் வலுவான ஆதரவாளராகவும் திகழ்ந்தவர் பிகேஆர்.ஆனால், இப்போது கட்சியின் எதிர்காலம் இப்படித்தான் இருக்க வேண்டும் என்று கூறும் அதிகாரமோ உரிமையோ அவருக்கு இல்லை என்று கூறிய அஸ்மின்,அவருடைய கருத்துகள் “தேவையற்றவை” என்றார்.

TAGS: