200 கிலோ போதைப்பொருள் கடத்திய நபருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது

200 கிலோ எடையுள்ள சாபுவை கடத்தி வந்த மெக்கானிக்கிற்கு உயர் நீதிமன்றம் மரண தண்டனை விதித்தது.

நீதிபதி லிம் ஹாக் லெங், 51 வயதான தாய்  சீ கியோங், தான் குற்றவாளி  என்ற கூற்றின் மீது போதுமான சந்தேகத்தை எழுப்பத் தவறியதைக் கண்டறிந்த பின்னர் அவருக்கு தண்டனை விதித்தார்.

லிம் தனது தீர்ப்பில், இது தாய்-யின் முதல் குற்றம் என்றாலும், கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களின் அளவு சபாவில் மிகப்பெரியதாக நம்பப்படுகிறது என்று கூறினார்.

இது கடந்த மூன்று வருடங்களில் நீதிமன்றத்தில் விசாரணைக்குட்படுத்தப்பட்ட ஐந்து போதைப்பொருள் வழக்குகளின் மொத்த தொகையை விட அதிகமாகும் என்றும் அவர் கூறினார்.

“தண்டனை விதிக்கப்படுவதற்கு முன் ஏதாவது சொல்ல நீதிமன்றம்  வாய்ப்பு வழங்கப்பட்ட போதிலும், குற்றம் சாட்டப்பட்டவர் எந்த வருத்தையும் காட்டவில்லை, பதிலளிக்கவில்லை,” என்று நீதிபதி கூறினார்.

முன்னதாக, துணை அரசு வழக்கறிஞர் ஹர்மன் ஹுசைன், போதைப்பொருளின் அளவு மற்றும் பொது நலனைக் கருத்தில் கொண்டு மரண தண்டனையை வழங்குவது குறித்து பரிசீலிக்குமாறு நீதிமன்றத்திடம் கோரிக்கை விடுத்தார்.

அரசு தரப்பில் துணை அரசு வக்கீல் சுஹைமி சூரியானாவும் ஆஜரானார்.

செப்டம்பர் 6, 2021 அன்று காலை 7.30 மணிக்கு கம்போங் பத்து பாயுங்கில் 200 கிலோ சியாபுவை கடத்தியதற்காக ஆபத்தான மருந்துகள் சட்டம் 1952 இன் பிரிவு 39B (1)(a) இன் கீழ்  அக்டோபர் 13, 2021 அன்று குற்றம் சாட்டப்பட்டது.

 

-fmt