பாஸ் கட்சியின்  அபத்தமான கருத்துக்கள் ஆபத்தானவையா?  

மார்டின் வெங்கடேசன் – கடத வார இறுதியில், பகாங்கின் தெமர்லோவில் பாஸ் கட்சியின் மாநாடு நடைபெற்றது. அதில் ஒவ்வாத சர்ச்சைக்குரிய கோரிக்கைகள் சில அளவுக்கதிகமாக நியாயமற்ற வகையில் பேசப்பட்டது, முன்வைக்கப்பட்டது;

இதை பாஸ் கட்சியின்  தீவிர வலதுசாரிகளின் விளிம்பு  என்று நிராகரிப்பது எளிது என்றாலும், நாம் யதார்த்தமாக இருக்க வேண்டும் அதோடு அதை இலகுவாக எடுத்துக்கொள்ள முடியாது என்பதையும் ஒப்புக்கொள்ள வேண்டும்.

எல்லாவற்றிற்கும் மேலாக, டேவான் ராக்யாட்டில் அதிக எம்.பி.க்களைக் கொண்ட கட்சி இது. இது நான்கு மாநில அரசாங்கங்களை இயக்குகிறது, மேலும் தனது இலக்கை நிர்ணயித்துள்ளது மற்றும் ஊடுருவி வருவதாகவும் தெரிகிறது.

கடந்த காலத்தில் அம்னோ/பிஎன்-ஐ வீழ்த்துவதே எதிர்க்கட்சிகளின் அசல்  திட்டமாக இருந்தபோது, ​​அம்னோவை விட்டு வெளியேறிய வாக்காளர்கள் குறைந்தபட்சம் நாட்டின் சில பகுதிகளிலாவது பாஸ் கட்சிக்கு படையெடுத்து சென்றுள்ளனர்.

உண்மையில், பல ஆண்டுகளாக  அம்னோவிற்கு சாதகமாக இருந்த கிராமப்புற மலாய் இடங்களின் தவறான பங்கீட்டால் பாஸ் கட்சிதான் அதிக பயனடைவது போல் தெரிகிறது.

மாயையில் இருப்பது ஆபத்தானது

அப்படியிருந்தும், அல்லாவின் மதத்தை மாற்றி உருவாக்கி, “கொடூரமான” தலைவர்களுடன் இணைந்து செயல்படும் மதவாதிகளின் குழு இருப்பதாக அக்கட்சியின் தலைவர் அப்துல் ஹாடி அவாங்கின் அபத்தமான குற்றச்சாட்டைக் கேட்டபோது, ​​​​ வியக்காமல் இருக்க முடியவில்லை.

“பொய்யர்கள் தலைவர்களாகவும், துரோகிகளை நம்புவதும்  நாம் கண்கூடாகக் காண்கிறோம்,” என்று அவர் கூறினார்.

பாஸ் தலைவர் அப்துல் ஹாடி அவாங்

பெயரை குறிப்பிடாமல், நாட்டை வழிநடத்துபவர்களால் இது இன்னும் அதிக தாக்கத்தை ஏற்படுத்துவதாக அவர் கூறினார்.

இது ஒரு மாயையான மற்றும் ஆபத்தான கூற்று இல்லையா?

இஸ்லாத்திற்கு எதிராக மக்களை அச்சுறுத்தும் வகையில் இஸ்லாமோ ஃபோபியாவை பரப்பும் கட்சிகள் இருப்பதால், ஷ ரியா சட்டத்தை அமல்படுத்துவதற்கான முயற்சிகள் சீர்குலைந்து வருவதாக ஹடி கூறினார்.

“சித்தாந்தங்கள் ஆக்ரோஷமாகவும் வெளிப்படையாகவும் ஊக்குவிக்கப்படுகின்றன, சர்வதேச முகவர்களால் ஆதரிக்கப்படுகின்றன, எங்கள் இனம் மற்றும் மதத்தின் துரோகிகளுக்கு உதவுகின்றன மற்றும் மடானி அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்படுகின்றன,” என்று அவர் கூறினார்.

இப்படிப்பட்ட போலிச் செய்திகள் பெரும்பான்மையினரின் இதயங்களிலும் மனங்களிலும் வேரூன்றுகிறதா? எதிர்காலத்தில் புத்ராஜெயா வரை அவர்களை அது உந்தித் தள்ளுமா?

எப்படியிருந்தாலும், அது அங்கு நிற்கவில்லை. சிலாங்கூர் பாஸ் இளைஞரணி செயலாளர் அபிதுல்லா பாஹிம் இப்ராஹிம், மலாய்க்காரர் அல்லாத வாக்காளர்களை கட்சிக்கு பெறுவதற்கு பிரிவின் தலைவர்கள் வெவ்வேறு இனங்கள் மற்றும் கலாச்சாரங்களைச் சேர்ந்தவர்களை மனைவிகளை எடுக்க வேண்டும் என்று பாஸ் இளைஞர் முக்தாமரிடம் கூறினார்.